Thursday, September 1, 2011

Vizhigalil Oru Vaanavil

படம் : தெய்வத்திருமகள் 
பாடியவர் : சைந்தவி 
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் 
இசை : ஜி. வி. பிரகாஷ் 

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டுப்  பேசுதே..
இது என்னப் புது வானிலை.. மழை வெயில் தரும்..
உன்னிடம் பார்கிறேன்.. நான் பார்கிறேன்..
என் தாய்முகம் அன்பே..
உன்னிடம் தோற்கிறேன்.. நான் தோற்கிறேன்..
என்னாகுமோ  இங்கே..
முதன் முதலாய் மயங்குகிறேன் ..
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்னே  என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டுப் பேசுதே 
இது என்னப் புது வானிலை...மழை வெயில் தரும்..

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ..
யார் இவன்.. யார் இவன்..
ஓர் மாயவன் மெய்யானவன் அன்பில் 
யார் இவன் யார் இவன் 
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில் 
இனம்புரியா.... உறவிதுவோ 
என் தேரில் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது 
மனம் எங்கும் மணம்

விழிகளில் ஒரு வானவில்... இமைகளை தொட்டுப் பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நான் உனக்காகப்  பேசினேன்..
யார் எனக்காகப்  பேசுவார்..
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த கனவெங்கே காற்றில் கை வீசினேன்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே..
உன் முன் தானடா இப்போது 
நான் பெண்ணாகிறேன்  இங்கே..
தயக்கங்களால் திணறுகிறேன்..
நில்லென்று சொன்னபோதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி..

தன ந ந ன ................

2 comments: