Thursday, January 19, 2012

Poovaasam Purappadum


பாடல் :               பூவாசம் புறப்படும் பெண்ணே
படம் :                  அன்பே சிவம்
பாடியவர்கள் :  ஸ்ரீராம் பார்த்தசாரதி, விஜய் பிரகாஷ் , சாதனா சர்கம்
இசை :                 வித்யாசாகர்
இயற்றியவர் :
ராகம் :                 சுத்தசாரங் (ஹிந்துஸ்தானி ராகம்)


ஆண் :   பூவாசம் புறப்படும் பெண்ணே  நான் பூ வரைந்தால்
              தீவந்து விரல்சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
பெண் :  உயிரல்லதெல்லாம் உயிர்கொள்ளும் என்றால்
              உயிருள்ள நானோ என்னாகுவேன்
ஆண் :   உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

ஆண் :   பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
              தீவந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

ஆண் :   புள்ளி  சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
              உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
பெண் :  கோடுக்கூட ஓவியத்தின் பாகமே
              ஊடல்கூட காதல் என்று ஆகுமே
ஆண் :  ஒரு வானம் வரைய நீல வண்ணம்
              நம் காதல் வரைய என்ன வண்ணம்
பெண் :  என் நெஞ்சத்தின் இடம் தொட்டு
              விரல் என்னும் கோல் கொண்டு
              நம் காதல் வரைவோமே வா ஆ ஆ ஆ ஆ ........
ஆண் :  பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
              தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

பெண் :  ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
ஆண் :   உற்றுப்பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண் :  பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது
ஆண் :  ஆண் தொடாத பாகம்தன்னில் உள்ளது
பெண் :  நீ வரையத் தெரிந்த ஒரு கவிஞன் கவிஞன்  
              பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
ஆண் :  மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழைப் போல்
              மடியோடு  விழுந்தாயே வா ஆ ஆ ஆ .....
              பூவாசம் புறப்படும் பெண்ணே பூ நான் வரைந்தால்
              தீ வந்து விரல் சுடும் கண்ணே தீ நான் வரைந்தால்
பெண் :  உயிரல்லதெல்லாம் உயிர்கொள்ளும் என்றால்
              உயிருள்ள நானோ என்னாகுவேன்
ஆண் :   உயிர் வாங்கிடும்  ஓவியம் நீயடி..............
பெண் :  ஆ ஆ ஆ ஆ    

No comments:

Post a Comment