Sunday, September 15, 2013

Thaalaattum Poongaattru Naanallava


பாட்டு                : தாலாட்டும் பூங்காற்று நானல்லவா  
படம்                  :  கோபுர வாசலிலே 
பாடலாசிரியர் : வைரமுத்து 
இசை                : இளையராஜா 
பாடியவர்         : எஸ். ஜானகி
ராகம்                :சிம்மேந்திரமத்திமம்


தாலாட்டும் பூங்காற்று நானல்லவா 
நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா 
வருவாயோ....வாராயோ...
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே 
என் நெஞ்சமே உன் தஞ்சமே... 

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா 
நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா....

நள்ளிரவில் நான் கண் விழிக்க 
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க 
பஞ்சனையில் நீ முள்விரித்தாய் 
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக 
காணும்  கோலங்கள் யாவும் நீயாக 
வாசலில் மன்னா உன் தேர் வர... ஆடுது பூந்தோரணம் 

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா 
நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா... 

எப்பொழுதும் உன் சொப்பனங்கள் 
முப்பொழுதும் உன் கற்பனைகள் 
சிந்தனையில் நம் சங்கமங்கள் 
ஒன்றிரெண்ட என் சஞ்சலங்கள் 
காலை நான் பாடும் காதல் பூபாளம் 
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும் 
ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா 

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா 
வருவாயோ....வாராயோ...
ஓ நெஞ்சமே... ஓ நெஞ்சமே... 
என் நெஞ்சமே உன் தஞ்சமே 

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா... 

No comments:

Post a Comment